உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.

Sunday, November 29, 2015

Friday, November 27, 2015

கள்ள தீர்க்கதரிசி எப்படி போலியான அற்புதங்கள் செய்வான்?



கடைசி காலத்தில் வரும் கள்ள  தீர்க்கதரிசி எப்படி போலியான  அற்புதங்கள் செய்வான் அது எந்த வல்லமையினால் செய்வான் எந்த ஆவிகள் கள்ள தீர்க்கதரிசிக்கு உதவும் விளக்கும்  அருமையான காணொளி ஆங்கிலத்தில் உள்ளது 


Share:

Wednesday, November 25, 2015

கள்ள உபதேசங்களுக்குக் கவனமாய் இருங்கள்

யார் இந்த யெகோவாவின்சாட்சிகள் ? இவர்களது உபதேசம் சரியானதா ? இவர்கள் யாருக்கு ஊழியம் செய்கின்றனர் ? இவர்களது தந்திரம் என்ன?


வெள்ளைக்காரன் தமிழ் பேசினால்

Share:

Friday, November 20, 2015

இஸ்மவேல் துஷ்ட மனுஷனா???

இஸ்மவேலை குறித்து வேதாகமம் சொல்லும் உண்மை சத்தியம் என்ன

இஸ்மவேலுக்கும் இஸ்லாமியர்களுக்கும் தொடர்பு என்ன

இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் பெற்றுகொள்வோம்
Share:

Tuesday, November 17, 2015

அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா

ஏசாயா
9 அதிகாரம்6.
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
Share:

Sunday, November 15, 2015

பிரான்ஸ் இன் பாதுகாபிற்காகவும் தேவனுடைய கோபம் தணியவும் செபித்து கொள்ளுங்கள்


கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா. சங்கீதம் 127:1
தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 128 பேர் பலியாகியுள்ளனர் பிரான்ஸ் இன் பாதுகாபிற்காகவும் தேவனுடைய கோபம் தணியவும்   செபித்து கொள்ளுங்கள் 

Share:

யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது லேசான காரியம்

பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந் லேசான காரியம்  தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் [2 ]
மண்ணான மனுவுக்கு மன்னாவை அழிப்பது லேசான காரியம் [2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் [ 2 ]
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் [ 2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

இடறிய மீனவனை சீசனாய் மாற்றுவது லேசான காரியம் [ 2 ]
இடையனை கோமகனாய் அரியனை ஏற்றுவதும் லேசான காரியம் [ 2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
இயேசுவுக்கு லேசான காரியம்
என் இயேசுவுக்கு லேசான காரியம் [2]
Share:

Friday, November 13, 2015

எந்த விடயமும் உங்கள்கு வாய்க்விலையா?

எந்த விடயமும் உங்கள்கு வாய்க்விலையா உங்களிடம் சாபம் உள்ளது என்று சொல்கின்றார்களா உள்ளம் கலங்காதிருங்கள் 
Share:

Wednesday, November 11, 2015

RFID என்ற பெயரின் மறைக்கபட்ட இரகசியம் என்ன ?

சாத்தான் எப்படி தந்திரமாக இந்த பெயரை இப்போது வழக்கத்தில் இல்லாத மொழியில் வைத்து அதற்கு வெளியில் வேறு ஒரு அர்த்தத்தை கூறி அனைவரையும் முட்டாள் ஆக்கி வருகிறான்
Share:

Thursday, November 5, 2015

இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல்

தாமதம் ஏனோ ? எங்கள் இயேசுவே

தாமதித்தோம் இந்த நாள்வரையும்

தாழ்விடங்களில் நோக்கி பார்த்து தற்பரனே இரங்கிடுவீர்

சீக்கிரம் என்று சொன்னவரே சியோனில் இருந்து இறங்கிடுவீர்

சீரான வாழ்வை எனக்களிக்க சிக்கிரம் வாரும் என் இயேசுவே

நீர் சிந்தின உதிரம் எல்லாம் சிலுவையின் கிழ் உதிர்ந்தனவே

நாங்கள் சிந்தின எங்கள் இரத்தமோ கொதித்து தணிந்து தீர்ந்தது
Share:

Wednesday, November 4, 2015

Tuesday, November 3, 2015

Monday, November 2, 2015

10 வாதைகளும் 10 கற்பனைகளும்

    ஆதியாகமம்1 அதிகாரம்
    24. பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

    25. தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

    26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.

    27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
28. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
தேவன் அனைத்து ஜீவன்களையும்  கீழ்ப்படுத்தி ஆண்டு ஆண்டுகொள்ளுங்கள் என்று  சொன்னார் ஆனால் பிசாசு மனிதனை படைப்புகள் அனைத்துக்கும் அடிமைபடுத்திவிடான்  
10 வாதைகளும் 10 கற்பனைகளும்
Share: