உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.

Saturday, September 26, 2015

எடுத்துக்கொள்ளப்பட்ட ஏனோக்கின் குடும்ப வாழ்க்கை - (Audio Message)

எடுத்துக்கொள்ளப்பட்ட ஏனோக்கின் குடும்ப வாழ்க்கை - இயேசுகிறிஸ்துவின் வருகையில் எடுத்துக்கொள்ளப்பட நம்மிடம் காணப்பட வேண்டிய தகுதிகள் - குடும்பக்கூடுகை - 19.9.2015 சனிக்கிழமை, இடம்: இயேசு நம்மோடு ஜெபவீடு, கோவில்பட்டி
Share:

Friday, September 25, 2015

இந்தியாவுக்குகாக பிரார்த்தனை

ஏன் இந்தியாவுக்குகாக  பிரார்த்தனைசெய்ய வேண்டும் ?
சென்னைக்கு வரும் ஆபத்து என்ன ?
Share:

Thursday, September 24, 2015

சீனாவில் கிறிஸ்தவர்கள் உபத்திரவத்தை கடக்க எப்படி முடிந்தது ?

சீனாவில் எழுபுதல் எப்படி அவியானவரினால் நிகழ்த்தபட்டது
சீனாவில் கிறிஸ்தவர்கள்  உபத்திரவத்தை கடக்க எப்படி முடிந்தது

பாகம் 1 https://youtu.be/jy0fqNQ90M4

பாகம் 02 https://youtu.be/7Gy6uHLdMyU

பாகம் 03 https://youtu.be/eXD49U_mCVI

பாகம் 04 https://youtu.be/Yehwod08TaI

பாகம்  05 https://youtu.be/LTNRr40_lNI
Share:

Tuesday, September 22, 2015

எழும்பவிருக்கும் மிருகம்


THE FINAL BLOOD MOON - THE BEAST IS ABOUT TO RISE 
இறுதி பிளட் மூன் - எழும்பவிருக்கும் மிருகம் 
Don't miss it...

மிருகத்தின் பிறப்பு 
Share:

Monday, September 21, 2015

பிரான்ஸில் குடியேற பெரும்பாலான அகதிகள் ஏன் விரும்புவதில்லை’? வெளியான பகீர் காரணங்கள்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் குடியேற பெரும்பாலான அகதிகள் விரும்பாததற்கான காரணங்களை பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். 
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து வெளியேறி ஐரோப்பாவில் குடியேற விரும்பும் பெரும்பாலான அகதிகளின் முக்கிய இலக்காக இருப்பது ஜேர்மனி, ஸ்வீடன், பிரித்தானியா மற்றும் ஃபின்லாந்து நாடுகள் மட்டுமே.
முன்னொரு காலத்தில் வெளிநாட்டினர்களின் முக்கிய தெரிவாக இருந்த பிரான்ஸ் நாட்டை தற்போது அகதிகள் ஒதுக்குவதற்கான காரணங்கள் என்ன?
ஈராக் நாட்டை சேர்ந்த எட்வர்ட் (24) கூறுகையில், பிரான்ஸ் நாடு என்னுடைய எதிர்க்காலத்துக்கு உகந்த நாடு அல்ல. இதற்கு மிக முக்கிய காரணம் இங்குள்ள மிக மோசமான வேலையில்லா திண்டாட்டம் தான்.
பிரான்ஸ் நாட்டில் தற்போது மட்டும் சுமார் 3.5 மில்லியன் நபர்கள் வேலையில்லாமல் அவதியுற்று வருகின்றனர்.
இதை விட மிக முக்கியமாக இருப்பது அகதிகளுக்கான அரசின் கொள்கை முடிவுகள்.
குறிப்பாக, பிரான்ஸ் நாட்டில் குடியிருப்பு அனுமதி (Resdence Permit) பெறுவது என்பது மிகச்சாதரணமான விடயம் அல்ல என கருத்து கூறியுள்ளார்.
சிரியா நாட்டிலிருந்து சுவீடன் நாட்டிற்கு சென்றுள்ள அப்துல்லா ரஹ்மான் (26) என்பவர் கூறுகையில், பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலாவிற்கு சென்று சுற்றிப்பார்ப்பதற்கு தான் தகுதியான நாடு.
ஆனால், வேலையை எதிர்ப்பார்த்து அந்நாட்டிற்கு செல்வது மிகவும் ஆபத்தானது. இந்நாட்டு மொழியை கற்பதும் மிகவும் சிரமான ஒன்று.
அகதிகளில் பெரும்பாலானவர்களுக்கு ‘அரைகுறையான’ ஆங்கிலம் மட்டுமே தெரியும். ஆனால், இந்த மொழிக்கூட இல்லாமல் பிரான்ஸ் நாட்டில் குடியேற தேவையான பெரும்பாலான விண்ணப்பங்கள் பிரெஞ்ச் மொழியில் மட்டுமே இருப்பது ஏற்புடையது அல்ல என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜேர்மனிக்கு வந்துள்ள அகதிகளில் சுமார் 1,000 நபர்களுக்கு குடியேற்ற அனுமதி வழங்க தயார் எனக்கூறி அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அதிகாரிகளை ஜேர்மனிக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால், அதிபர் எதிர்ப்பார்த்தைவிட குறைவாக 600 அகதிகளே பிரான்ஸ் நாட்டிற்கு வந்துள்ளனர்.
சூடான் நாட்டை சேர்ந்த கரீம் என்ற நபர் சுமார் 8 மாதங்களாக பாரீஸில் உள்ள ஒரு பூங்காவில் தங்க வந்ததன் விளைவாக அவருக்கு அரசு குடியேற்ற அனுமதி வழங்கியது.
இது குறித்து பேசிய அவர், ‘புகலிடம் கிடைத்தால் போதுமா? வருமானத்திற்கு வேலை கிடைக்க வேண்டுமே…இந்நாட்டு மொழியை கற்றுக்கொண்டால் தான் அதிக வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அதற்கான வழிமுறைகள் குறைவாக இருக்கிறது’ என வேதனை தெரிவித்துள்ளார்.
சிரியா நாட்டை சேர்ந்த Sabreen Al-Rassace என்பவர் கூறுகையில், பிரான்ஸ் நாட்டில் ஒரு வீட்டை பார்த்து குடியேறுவது என்பது மிகவும் சிரமமானதாக இருக்கிறது.
குடியேற்ற அனுமதி பெற வேண்டும் என்றால், அதிகாரிகளுக்கு கட்டாயம் வீட்டு முகவரி அளிக்க வேண்டும். ஆனால், வீடே கிடைக்காதபோது வீட்டு முகவரியை எப்படி கொடுக்க முடியும்?
முழுவதுமாக, அகதிகளிற்கு குடியேற்ற அனுமதி வழங்கும் இந்நாட்டு அரசாங்க அதிகாரிகளின் வழிமுறைகள் அனைத்தும் மிகவும் கடினமானதாகவே உள்ளது என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில், பிரான்ஸ் நாட்டில் குடியேற்ற அனுமதிக்காக காத்துக்கொண்டுருக்கும் 60 ஆயிரம் நபர்களுக்கு 30 ஆயிரம் படுக்கைகள் தான் இருக்கின்றன.
எஞ்சிய நபர்கள் நண்பர்கள் வீட்டில் அல்லது பூங்காக்களில், இன்னும் மோசமாக தெருக்களில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை நன்கு உணர்ந்த சில அகதிகள், ‘பிரான்ஸ் நாடு அகதிகளுக்கான நாடு அல்ல’ என வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுக்கும் வகையில் சில நபர்கள் பேஸ்புக்கில் பக்கத்தை தொடங்கி பரப்பி வருகின்றனர்.
புலம்பெயர்தல் குறித்து ஆய்வு செய்து வரும் Francois Gemene என்ற நிபுணர் கூறுகையில், பிரான்ஸ் நாட்டில் குடியேற பெரும்பாலான அகதிகள் விரும்பாதது, இந்நாடு அவர்களை எந்தவிதத்திலும் கவரவில்லை என்பதையே காட்டுகிறது.
தற்போது உள்ள நடைமுறைகளை மறு ஆய்வு செய்து, அகதிகளுக்கு பயன்படும் வகையில் விதிமுறைகளை மாற்றி அமைப்பதில் பிரான்ஸ் அரசு அக்கறை செலுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் அகதிகளுக்கான நாடாக பிரான்ஸ் திகழும் என Francois Gemene கருத்து தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின்  அகதிகள் ஓடுக்கும் சட்டங்கள் தொடர்பில் வானத்தையும் பூமியையும் படைத்த இயேசு 
ஏசாயா
10 அதிகாரம்
    1. ஏழைகளை வழக்கிலே தோற்கப்பண்ணவும், என் ஜனத்தில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும்,

    2. அநியாயமான தீர்ப்புகளைச் செய்கிறவர்களுக்கும், கொடுமையான கட்டளைகளை எழுதுகிறவர்களுக்கும் ஐயோ!

    3. விசாரிப்பின் நாளிலும், தூரத்திலிருந்து வரும் பாழ்க்கடிப்பின் நாளிலும் நீங்கள் என்னசெய்வீர்கள்? உதவிபெறும்படி யாரிடத்தில் ஓடுவீர்கள்? உங்கள் மகிமையை எங்கே வைத்து விடுவீர்கள்?

    4. கட்டுண்டவர்களின்கீழ் முடங்கினாலொழிய கொலைசெய்யப்பட்டவர்களுக்குள் விழுவார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.
Share:

Saturday, September 19, 2015

உன்னை எவரும் கொல்ல முடியாது

கத்தர் உன்னை காப்பவர் உன்னை எவரும் கொல்ல முடியாது 
Share:

Friday, September 18, 2015

இந்த கடவுளுக்கு கண் இல்லையா

இந்த கடவுளுக்கு கண் இல்லையா, கடவுளுக்கு காது இல்லையா
Share:

Thursday, September 17, 2015

Wednesday, September 16, 2015

Saturday, September 12, 2015

இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன்

இஸ்ரேல் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள். சீயோனே... சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்..உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான். (சங் 83:4, சக 2:8)

இஸ்ரவேலே, நீ பாக்கியவான், கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய். உபாகமம் 33:29

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம். யாக்கோபு என்னும் பூச்சியே,
இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார். ஏசாயா 54:17, 41:14
Share:

Sunday, September 6, 2015

உந்தன் உயிரிலும் மேலாக என்னை நேசிக்கும் எனதருமை தகப்பனே



உந்தன் உயிரிலும் மேலாக
என்னை நேசிக்கும் எனதருமை தகப்பனே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்

எத்தனை நன்றி சொல்லி துதித்தாலும்
உம் அன்புக்கு ஈடாகுமா
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்

இடி என இன்னல்கள் வந்தாலும்
வெண்பனி போல் மாற்றீனீரே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்

எத்தனை பேர் என்னை ஏமாற்றினாலும்
நீர் என்னை ஆசீர்வதித்தீர்
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்

எந்தன் உயிரை கொல்ல தேடியபோது
உந்தன் சிறகுகளில் மறைத்து காத்தீரே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்

அந்நிய நாட்டில் அகதியாய் வாழ்ந்தேன் 
நீர் எனக்கு அடைக்கலமே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
Share: