Tuesday, December 30, 2014
Monday, December 29, 2014
தன்னையே ஜீவ பலியாக கொடுக்க எடுத்தார் ஏழை மனுவுரு
அதரிசனமான கடவுள் தரிசனமாக எடுத்தார் ஏழை மனுவுரு
பாவ இருளில் இருந்து மனிதனை மீட்க எடுத்தார் ஏழை மனுவுரு
தேவனின் நித்திய அன்பை மனிதனுக்கு வெளிபடுத்த எடுத்தார் ஏழை மனுவுரு
தேவன் கொடுத்த நியமத்தின் படி மனிதனுக்கு வாழ்ந்து காட்ட எடுத்தார் ஏழை மனுவுரு
தேவன் கொடுத்த நியமத்தின் படி மனிதனுக்கு வாழ்ந்து காட்ட எடுத்தார் ஏழை மனுவுரு
மனிதனுக்கும் தேவனுக்கும் இடையில் இருந்த முறிந்து போன உறவை புதுபிக்க எடுத்தார் ஏழை மனுவுரு
மனிதனுக்கு நித்திய வாழ்வை வழங்க எடுத்தார் ஏழை மனுவுரு
மனித இனத்திற்காக மட்டுமே எடுத்தார் ஏழை மனுவுரு
தன்னையே ஜீவ பலியாக கொடுக்க எடுத்தார் ஏழை மனுவுரு
என் வலைப்பூவில் வருகை தரும் வாசகர்களுக்கு பிறக்கும் இயேசு பாலன் உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் நிறை ஆசீரும் அருளும் வழங்குவாராக. உங்கள் அனைவருக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்
Wednesday, December 24, 2014
தன்னையே ஜீவ பலியாக கொடுக்க எடுத்தார் ஏழை மனுவுரு
அதரிசனமான கடவுள் தரிசனமாக எடுத்தார் ஏழை மனுவுரு
பாவ இருளில் இருந்து மனிதனை மீட்க எடுத்தார் ஏழை மனுவுரு
தேவனின் நித்திய அன்பை மனிதனுக்கு வெளிபடுத்த எடுத்தார் ஏழை மனுவுரு
தேவன் கொடுத்த நியமத்தின் படி மனிதனுக்கு வாழ்ந்து காட்ட எடுத்தார் ஏழை மனுவுரு
தேவன் கொடுத்த நியமத்தின் படி மனிதனுக்கு வாழ்ந்து காட்ட எடுத்தார் ஏழை மனுவுரு
மனிதனுக்கும் தேவனுக்கும் இடையில் இருந்த முறிந்து போன உறவை புதுபிக்க எடுத்தார் ஏழை மனுவுரு
மனிதனுக்கு நித்திய வாழ்வை வழங்க எடுத்தார் ஏழை மனுவுரு
மனித இனத்திற்காக மட்டுமே எடுத்தார் ஏழை மனுவுரு
தன்னையே ஜீவ பலியாக கொடுக்க எடுத்தார் ஏழை மனுவுரு
என் வலைப்பூவில் வருகை தரும் வாசகர்களுக்கு பிறக்கும் இயேசு பாலன் உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் நிறை ஆசீரும் அருளும் வழங்குவாராக. உங்கள் அனைவருக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்
Tuesday, December 16, 2014
Saturday, December 13, 2014
பெண்களை தாக்கும் மிக கொடிய வியாதியான இரத்த போக்கில் இருந்து விடுதலை பாகம் 02
sarujan
1:47 PM
அறிவியல், ஆய்வின், உடலின், திடீரென, தேவாலயத்தில், பேராசிரியர், மின்னல், ரத்தம்
No comments
Sis.J.Janet Shanti அவர்களின் மனதை உருகும் சாட்சி
பெண்களை தாக்கும் மிக கொடிய வியாதியான இரத்த போக்கில் இருந்து விடுதலைபாகம் 01
Friday, December 12, 2014
Wednesday, December 10, 2014
Thursday, December 4, 2014
Monday, December 1, 2014
Wednesday, November 26, 2014
Sunday, November 16, 2014
நம்பி வந்த மனிதர்களெல்லாம் நன்மைகள் ஏராளம்
sarujan
8:18 AM
dieu, Fr Berchmans, jesus, le poussient, maaha, mirakilu;laa;mon, rajah, ullathin, பாடல்கள்
No comments
நம்பி வந்த மனிதர்களெல்லாம்
நன்மைகள் ஏராளம்
நம்புகிறேன் நம்புகிறேன்
நம்பத் தக்க தகப்பனே
1.
மனிதரின் சூல்சியிநின்று
மறைத்து காத்து கொள்வீர்
நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுக்கள்
அணுகாமல் காப்பாற்றுவீர்
2.
என் பலன் நீர் தானே
என் கேடகமும் நீர்தானே
சகாயம் பேட்ட்ரேன்
பாட்டினால் உம்மைத் துதிப்பேன் – நான்
3.
கானானியப் பெண் ஒருத்தி
கத்திக் கொண்டே பின் தொடர்ந்தால்
அம்மா உன் நம்பிக்கை பெரியது என்று
பாராட்டிப் புதுமை செய்தீர்
4.
கிருபை சூழ்ந்து கொள்ளும்
உம பேரன்பு பின்தொடரும்
கர்த்தருக்குள் இதயம் களிகூர்ந்து தினமும்
காலமெல்லாம் புகழ் பாடும்
5. குருடன் பர்த்திமேயு
கூப்பிட்டான் நம்பிக்கையோடு
தாவீதின் மகனே எனக்கு
இறங்கும் என்று
ஜெபித்து பார்வை பெட்ட்றான்
6.
நம்பி வந்த குஷ்டரோகியை
நலமாக்கி அனுப்பினீரே
மரித்த மகளையே உயிர்பெறச் செய்தீர்
யாவீர் உம்மை நம்பினதால்
8.
இக்கட்டு துன்ப வேழையில்
காக்கும் அரனாநீர்
பூரண சமாதானம் பூரண அமைதி
தினம் தினம் நிரப்புகிறீர்
நன்மைகள் ஏராளம்
நம்புகிறேன் நம்புகிறேன்
நம்பத் தக்க தகப்பனே
1.
மனிதரின் சூல்சியிநின்று
மறைத்து காத்து கொள்வீர்
நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுக்கள்
அணுகாமல் காப்பாற்றுவீர்
2.
என் பலன் நீர் தானே
என் கேடகமும் நீர்தானே
சகாயம் பேட்ட்ரேன்
பாட்டினால் உம்மைத் துதிப்பேன் – நான்
3.
கானானியப் பெண் ஒருத்தி
கத்திக் கொண்டே பின் தொடர்ந்தால்
அம்மா உன் நம்பிக்கை பெரியது என்று
பாராட்டிப் புதுமை செய்தீர்
4.
கிருபை சூழ்ந்து கொள்ளும்
உம பேரன்பு பின்தொடரும்
கர்த்தருக்குள் இதயம் களிகூர்ந்து தினமும்
காலமெல்லாம் புகழ் பாடும்
5. குருடன் பர்த்திமேயு
கூப்பிட்டான் நம்பிக்கையோடு
தாவீதின் மகனே எனக்கு
இறங்கும் என்று
ஜெபித்து பார்வை பெட்ட்றான்
6.
நம்பி வந்த குஷ்டரோகியை
நலமாக்கி அனுப்பினீரே
மரித்த மகளையே உயிர்பெறச் செய்தீர்
யாவீர் உம்மை நம்பினதால்
8.
இக்கட்டு துன்ப வேழையில்
காக்கும் அரனாநீர்
பூரண சமாதானம் பூரண அமைதி
தினம் தினம் நிரப்புகிறீர்
Friday, November 14, 2014
Thursday, November 13, 2014
Sunday, November 9, 2014
ஒரு நாதஸ்வர வித்துவானின் ஒரு சாட்சி
sarujan
4:15 PM
jesus, Paul Sheik Chinna Kasim, srilnaka, இந்துகள், ஊழியகாரன், நாதஸ்வர, முஸ்லீம், யாழ்பாணம்
No comments
கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன்
sarujan
1:54 PM
dieu, Fr Berchmans, jesus, le poussient, maaha, mirakilu;laa;mon, rajah, ullathin, பாடல்கள்
No comments
கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன்
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்
அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி
அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா – அப்பா
எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
எந்த நிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே
பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணை செய்தீரே
ஒரு நாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்
தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா
எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர்
இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்
பாதை அறியா குருடனைப் போல் வாழ்ந்தேன் ஐயா
பாசத்தோடு கண்களையே திறந்தீர் ஐயா
Friday, October 31, 2014
உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 08
sarujan
2:25 PM
comme kings of kings, des angels, end of the world, fin, finish, Last days, new jeruslam, reveille, temine, temine la terre, time over, toi, இறுதி காலம்
No comments
இந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை உலகம் முழுதும் இருளாக தொடர்ந்து இருக்குமென நாசா நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த இருள் சூழ்ந்த நாட்களில் ஓர் பயங்கர சூரிய மண்டல புயல் வீசுமெனவும் அதனால் ஏற்படுகின்ற மாற்றத்தால் தூசி, துகள்கள் நிரம்ப போவதால் சூரிய ஒளி பூமிக்கு வருவது தடைப்படும் என்றும் அவர் கூறுகின்றார்.
இந்த இருள் சூழ்ந்த நாட்களில் ஓர் பயங்கர சூரிய மண்டல புயல் வீசுமெனவும் அதனால் ஏற்படுகின்ற மாற்றத்தால் தூசி, துகள்கள் நிரம்ப போவதால் சூரிய ஒளி பூமிக்கு வருவது தடைப்படும் என்றும் அவர் கூறுகின்றார்.
நாசாவின் தலைவர் சார்ஸ் போல்டன் மேலும் தெரிவிக்கையில்,
இந்த சூரிய மண்டலப் புயலால் பூமி இருளில் மூழ்கினாலும் எந்தவித பாதிப்பும் பூமிக்கு ஏற்படாது.
இதற்கு யாரும் அஞ்ச வேண்டியது இல்லை. இது 250 வருடங்களில் ஏற்படப்போகின்ற மிகப்பெரிய சூரிய மண்டல புயலாகும்.
216 மணித்தியாலங்கள் தொடர்ந்து இருள் நீடிப்பதால் ஆறு நாட்கள் பூமியில் மின் விளக்குகளுடனேயே செயலாற்ற வேண்டி வரும் என்று குறிப்பிட்டார்.
இது சம்பந்தமாக மேலதிக விபரங்களை நாசா இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென விஞ்ஞானி ஏர்ல் கொடோயில் தெரிவிக்கின்றனர்.
வெளிப்படுத்துதல் 08
12 நான்காம் தூதன் தன் எக்காளத்தை எடுத்து ஊதினான். அதனால் மூன்றில் ஒரு பகுதியான சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் சேதப்பட்டன. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு இருண்டது. இரவிலும், பகலிலும் மூன்றில் ஒரு பாகம் வெளிச்சம் இல்லாமல் போனது.
யோவேல் 2:31 கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.
உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 01
உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 02
உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 03
Sunday, October 26, 2014
Wednesday, October 22, 2014
Sunday, October 19, 2014
Monday, October 13, 2014
வசதி வரும் போது கடவுளை மறக்காதே
sarujan
3:17 AM
: Catholic, Catholic Pentecost Mission, chathlicpetacost, chirstmax, christ, church, maadu, malasiya, manathi manan, விளக்கங்கள்
No comments
- ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு எனும் உன் மூதாதையருக்கு கொடுப்பதாக, ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள், உன் கடவுளாகிய ஆண்டவர், உன்னைப் புகச் செய்யும் போதும், நீ கட்டி எழுப்பாத பரந்த வசதியான நகர்களையும்,
- நீ நிரப்பாத எல்லா செல்வங்களால் நிறைந்த வீடுகளையும், நீ வெட்டாத பாறைக் கிணறுகளையும், நீ நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுக்கும் போதும், நீ உண்டு நிறைவு கொள்ளும் போதும்,
- அடிமைத்தன வீடாகிய, எகிப்து நாட்டினின்று, உன்னை வெளியே கூட்டி வந்த, ஆண்டவரை மறந்து விடாதபடி, கவனமாய் இரு - இ.ச 6:10-12.
- இன்று, நான் உங்களுக்கு கட்டளையிடுகின்ற கட்டளைகள், நியமங்கள், முறைமைகள், ஆகியவற்றினின்று, வழுவியதன் மூலம், உங்கள் கடவுளாகிய ஆண்டவரை, மறந்து போகாதபடி, கவனமாய் இருங்கள் - இ.ச 8:11.
- நீங்கள் உண்டு நிறைவு கொள்ளும் போதும், அழகிய வீடுகளை கட்டி, அவைகளில் குடியிருக்கும் போதும்,
- உங்கள் ஆடு மாடுகள் பலுகும் போதும், வெள்ளியும் பொன்னும், உங்களுக்கு மிகுதியாகும் போதும், உங்களுக்கு உள்ளதெல்லாம் பெருகும் போதும்,
- நீங்கள் நெஞ்சில் செருக்குற்று, அடிமைத்தனத்தின் வீடாகிய, எகிப்து நாட்டிலிருந்து, உங்களை கூட்டி வந்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து விட வேண்டாம் - இ.ச 8: 12-14.
- அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும், தேள்களும் நிறைந்த, நீரற்று, வறண்ட நிலமான, பரந்த கொடிய பாலைநிலத்தில் உங்களை வழிநடத்தியவர். இறுகிய பாறையிலிருந்து, உங்களுக்காக, நீரைப் புறப்படச் செய்தவர் - இ.ச 8:15.
- உங்கள், மூதாதையருக்கு தெரிந்திராத மன்னாவால், பாலைநிலத்தில் உங்களை, உண்பித்தவர், இறுதியில் உங்களுக்கு நல்லது செய்வதற்காக, உங்களை எளியவராக்கி, சிறுமைப்படுத்தி, சோதித்தவரும் அவரே - இ.ச 8:16.
- எனவே, எங்கள் ஆற்றலும், எங்கள் கைகளின் வலிமையுமே, இந்த செல்வங்களை எங்களுக்கு ஈட்டித் தந்தன என்று, உங்கள் உள்ளங்களில் எண்ணாதபடி, கவனமாய் இருங்கள் - இ.ச 8:17.
- உங்கள் மூதாதையருடன் ஆணையிட்டு செய்து கொண்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்துமாறு, இந்நாளில் இருப்பது போன்ற, செல்வங்களை ஈட்ட வல்ல, ஆற்றலை உங்களுக்கு அளித்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை, நினைவில் கொள்ளுங்கள் - இ.ச 8:18.
- நன்றி http://www.catholicpentecostmission.in/kathampam.html
Thursday, October 9, 2014
Tuesday, October 7, 2014
இவர்கள் தாம் செய்வது என்ன என்று தெரிந்தே செய்கிறார்கள்!
sarujan
11:09 AM
ellam, genicide in srilanka, killing field, no fire zone, tamils, war crimes, war srilanka, இலங்கை, காங்கிரஸ், தீர்கதரிசனம்
No comments
வருவார் ஆனால் அவர் வருகையை யாரும் அரசியலாக்ககூடாது என்ற பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்கள் அறிவித்துள்ளார்.
புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் சிறீலங்காவுக்கு வருகை தருவாரா, மாட்டாரா என்று கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக அலைமோதிய ஆரூடங்கள், கணிப்புகளை கடந்து இப்போது உறுதியாக கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் அறிவித்துவிட்டார்.
2015 ஜனவரி 13-15 திகதிகளில் அவரது வருகை இருக்கும் என்று. உத்தியோகபூர்வமான அறிவிப்பு.
அத்துடன் அந்த அறிவிப்பில் சிறிய ஒரு இடைச்செருகலையும் அவர் வலிந்து சேர்த்துள்ளது கவனிக்கப்பட்டதா இல்லையா தெரியவில்லை.
எனினும் எமக்கு அந்த இடைச்செருகல் வசனம்தான் மிகமுக்கியமானதாக இருக்கிறது.
போப் பிரான்சிஸ்ஸின் வருகையையின் போது அரசியலை யாரும் ஆயுதமாக பயன்படுத்த வேண்டாம் என்பதே அந்த அறிவிப்பு.
புனித பாப்பரசரின் விஜயத்தை யாருமே அரசியலாக்கக் கூடாது என்ற பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்களின் அறிவிப்புக்கு பின்னால் சிங்கள பேரினவாதத்துக்கு எதிரான ஏதும் கருத்துகள் பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களாலோ அல்லது வடக்கு - கிழக்கின் திருச்சபையாலோ அந்நேரத்தில் வெளியிட்டு விடப்படக்கூடாது என்ற மகாகரிசனை தெரிகிறது.
மல்கம் ரஞ்சித் அவர்களின் இந்த அறிவிப்பு சம்பந்தமாக பார்ப்பதற்கு முன்பாக, முதலில் ஒன்றை பொதுவாக புரிந்து கொள்ளுதல் மிக அவசியம்.
கடந்த காலங்களில் முழு இலங்கையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்புகளில் இருந்தவர்கள் எப்போதும் சிங்கள பேரினவாத அரசைக் காப்பதிலும் சிங்கள இனம் என்பதற்கே அதிக முன்னுரிமை கொடுத்ததும் வரலாற்றின் பக்கங்களில் பதிவாகி இருக்கிறது.
மனுக்குலத்தின் பாவங்களுக்காக இரத்தம் சிந்திய இறைதுாதரின் போதனைகளை ஒழுகுபவர்கள், போதிப்பவர்கள் இப்படி ஓரவஞ்சகமாக நடந்து கொள்வது எத்தனை பாவம் என்று தெரிந்துகொண்டே இதனை கடந்த காலங்களில் பேராயர்கள் செய்துள்ளார்கள்.
2009 ஒக்டோபர் 2ம் திகதி அன்று கொழும்பின் அமெரிக்க துாதர் பெற்றீசியா பியுட்டினியஸை சந்தித்த மல்கம் ரஞ்சித் மகிந்த ராஜபக்ச அரசுக்கு ஆதரவாக கதைத்ததும் போர்க்குற்றசாட்டுகளை வலியுறுத்தினால் சிறீலங்காவில் ஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் இராணுவ புரட்சி ஏற்படும் என்று கூறியதாக விக்கிலீக்ஸ் ஆதாரத்துடன் வெளியிட்டது உண்மைதான் என்று நம்பவேண்டியதாக இருக்கிறது பேராயர் ரஞ்சித்தின் இப்போதைய அறிவிப்பை பார்க்கும்போது.....
இரண்டாயிரம் வருசங்களுக்கு முன்னர் முள்முபடி தரிக்க வைத்து, பாரச்சிலுவை காவிட செய்து, சவுக்கால் அடித்து, தேவனின் குமாரன் கல்வாரி மலைக்கு கொண்டு செல்லப்படும் போது தமது வானக தந்தைக்கு விண்ணப்பித்தது போல ''தந்தையே, இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள், இவர்களை மன்னியும்'' என்று மன்னித்து மறந்துபோக எம்மால் முடியாது.
எனினும் வரலாற்றின் சில பக்கங்களை தெரிந்து கொள்ளுதல் நலம் என்பதற்காக சிலவற்றை இதோ தருகிறோம்...
இன்று பேராயர் மல்கம் ரஞ்சித் கூறிய அதே கருத்தையே இற்றைக்கு எழுபது வருடங்களுக்கு முன்னர் அரசியல்கூடாது என்று சொல்லிக் கொண்டு மௌனம் காத்ததால் இன்று வரைக்கும் வரலாற்றின் பக்கங்களில் மிக மோசமான ஒரு போப் ஆகவும் அவலமாக சித்தரிக்கப்படுகிறார் பன்னிரண்டாம் பயஸ் என்ற போப்.
மல்கம் ரஞ்சித் அவர்களும் அத்தகைய ஒரு மௌனத்தையா விரும்புகிறார்?? வரலாற்றை திரும்பி பார்ப்பது அனைவர்க்கும் நல்லதுதான்.
ஆட்சிக்கு வந்ததுமே யூத இனத்தின் மீதான அனைத்து வன்மங்களையும் சட்டமாக ஆக்குகிறான் கிட்லர். 1939ல் திடுதிப்பென்று இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியதுமே கிட்லர் நிலைமையை தனக்கு சாதகமாக ஆக்கி கொண்டு யூதர்களை மானுட எதிரிகள் என்று அறிவிக்கின்றான்.
அப்போதும் வத்திகானின் போப் மௌனம். அரசியலாக்ககூடாது என்ற பெரு மௌனம். அதுவே கிட்லருக்கு இன்னும் துணிவையும், ஏன் என்று கேட்க யாருமே இல்லை என்ற தைரியத்தையும் கொடுத்து அவன் தொடர்கிறான்.
இயல்பாகவே மிகமிக அதிகமாக கத்தோலிக்கர்களை மக்களாக கொண்ட ஜேர்மனியில் எப்போதும் மக்கள் மத்தியில் வத்திகானின் போப் அவர்களின் செய்திகளுக்கும் கருத்துக்கும் ஒரு உயரிய இடம் உண்டு.
யூதர்களை மானுட எதிரிகளாக கிட்லர் அறிவித்தபோதே எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் ஒருவேளை யூதபடுகொலைகளை தடுத்திருக்கலாம் அல்லது குறைத்தே இருக்கலாம். ஆனால் பன்னிரண்டாம் பயஸ் அப்படி செய்யவில்லை. ஏனெனில் அரசியல் வேண்டாம் என்று.
1941ல் யுத்தத்தின் அனைத்து சாதகங்களும் வெற்றிகளும் உறுதிப்படுத்தப்பட்டதும் கிட்லர் இறுதித் தீர்ப்பு ஒன்றை யூத மக்களுக்கு கொடுக்கிறான். ஐரோப்பா முழுதும் பரந்து வாழும் யூதர்களை ஒன்றுதிரட்டி படுகொலை செய்து முற்றாக துடைத்தெறிவது என்று..
அதற்கு முதல் யூதர்களின் மனிதவலு முழுவதையும் பலாத்காரமாக பெற்று கொள்ளும் கட்டாய உழைப்பு முகாம்களில் அடைப்பது என்றும் கிட்லர் தீர்மானிக்கிறான். அப்போதும் பன்னிரண்டாம் பயஸ் என்ற புனித தந்தை கடும் மௌனம்.
ஆஸ்விட்ஸ், டச்சாவ், புசன்வோல்ற், செம்னோவ், பெல்செக், மெடானொக் போன்ற தடுப்பு (கொலை) முகாம்களில் 24 மணிநேரமும் விச அறைகளில் யூதஇன படுகொலை நடந்தேறியது.
ஐரோப்பா முழுதும் இருந்து தொடரூந்துகளில் கொண்டுவரப்பட்டவர்கள் குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டார்கள். ஏறத்தாள 38லட்சம் யூதர்கள் இவ்வாறு விசஅறைகளுள் கொல்லப்பட்டார்கள்.
16 லட்சம் யூதர்கள் கட்டாய உழைப்பு மையங்களில் நோயினாலும் உணவின்றியும் கொல்லப்பட்டார்கள். எல்லமாக 53 லட்சம் யூத இன மக்கள் கொல்லப்பட்டார்கள். அப்போதும் பன்னிரண்டாம் பயஸ் மௌனமாகவே இருந்தார்.
இவை எல்லாவற்றினதும் உச்சமாக, 1943 அக்டோபர் 16ம்திகதி மனுக்குல வரலாற்றின் மிக அவமான நாள். அந்த நாளில் இறைமகன் கிறிஸ்துவின் போதனைகளை பரப்ப என்றும், கடவுளின் பிரதிநிதியாக போப்பாண்டவர் இருக்கும் வத்திகானுக்குள்ளேயே நாசிக்கள் புகுந்து யூதர்களை இழுத்து சென்றார்கள்.
கிறிஸ்தவர்களாக மதம் மாறிய யூதர்களைகூட நாசிக்கள் விடவில்லை. மத நம்பிக்கை மாறினால் என்ன யூத இரத்தம் மாறாது என்று சொல்லியே யூதர்களை இழுத்து சென்றார்கள்.
இவற்றுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் ஏராளம் பாதிரியார்களும், ஆயர்களும் துணிவுடன் போராடினாலும்கூட மிகமிக உயர்மட்டமான போப்பாண்டவர் பன்னிரண்டாம் பயஸ் மௌனமாகவே இருந்தார்.
வத்திகானுக்குள் அந்த நாளில் மட்டும் அதிகமான பெண்கள், குழந்தைகள் உட்பட 1007 யூதர்கள் பிடிக்கப்பட்டார்கள்.
அவர்கள் உடனடியாகவே அஸ்விற்ஸ் முகாமுக்கு அனுப்பப்பட்டு அவர்களில் 811 பேர் உடனடியாகவே விசவாயு அறைக்கு கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்டார்கள்.
அப்போதும் பன்னிரண்டாம் பயஸ் ஏனோ மௌனம்தான். கடவுளின் பிரதிதிநிதி என்ற ஸ்தானத்தில் அமர்ந்திருந்த பன்னிரண்டாம் பயஸ் ஒரு கண்டனம், ஒரு எதிர்ப்பு தனது குரலில் தெரிவித்து இருந்தால் அது இறை நம்பிக்கை மிகுந்த ஜேர்மனிய மக்கள் மத்தியிலும், கிட்லரின் படை மத்தியிலும் ஏராளம் எதிர்ப்புகளை நிச்சயமாக தோற்றுவித்து இருக்கும்.
இந்த யுத இன அழிப்பு ஒருவேளை தடுக்கப்பட்டும் இருக்கும். ஒரே ஒரு அறிவிப்பு வத்திகானின அதிகாரபுர்வமான வானொலியில் இந்த யூத இனபடுகொலைகளை நிறுத்துங்கள் என்று அறிவித்திருந்தால் வரலாறு வேறுவிதமாக மாறி இருக்கலாம்.
அரசியல் வேண்டாம் என்ற மௌனம் எவ்வளவு மானுட கொலைகளை அனுமதித்து இருக்கிறது பன்னிரண்டாம் பயஸின் மௌனத்தால்.
கம்யூனிசத்துக்கு எதிரான சக்தியாக விளங்கும் கிட்லரை விமர்சித்தால், கண்டித்தால் எங்கே கம்யூனிசம் ரஸ்யாவில் இருந்து ஐரோப்பா முழுதும் வந்துவிடுமோ அதனால் திருச்சபை கலைந்துவிடுமோ என்ற பயம்தான் அவரின் மௌனத்துக்கான காரணம்...
ஆனால் பன்னிரண்டாம் பயஸின் மௌனம் என்பது வரலாற்றின் மிக மோசமான ஒரு துரோகம். மௌனம்கூட ஒருவிதத்தில் அநீதிகளுக்கான அங்கீகாரம்தான். அது மட்டுமல்லாமல் அவர் இந்த படுகொலைகளில் இறந்தவர்களின் ஆத்மாசாந்தி அடைய பிரார்த்தனைகளைகூட நடாத்த ஒத்துகொள்ளவில்லை.
அதுமட்டுமல்லாமல், கிறிஸ்துவர்களாக மாறி குருமார்களாகவும், கன்னியாஸ்திரிகளாகவும் இருந்து வத்திகானில் இருந்து நாசிகளால் இழுத்து செல்லப்பட்டவர்களுக்காககூட மதச்சடங்குகளை செய்ய ஒத்துக்கொள்ளவில்லை என்பதுதான் மிகப்பெரிய அவலம்.
யூத படுகொலைகளை கண்டிக்க மறுத்ததற்காக போப்பாண்டவர் பன்னிரண்டாம் பயஸ்க்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதத்தை வத்திகானுக்கான ஜேர்மனிய துாதர் 1943 அக்டோபர் 28ம்திகதி வழங்கி கௌரவிக்கிறார். மௌனத்துக்கு பரிசு??
அரசியல் வேண்டாம், அரசை கண்டித்தால், அல்லது அரசுமீது பேரர்க்குற்றச்சாட்டு, விசாரணை என்று புறப்பட்டால் ஜனநாயகம் கெட்டுவிடும், இராணுவ புரட்சிவரும் என்று சொல்லி சொல்லியே தமிழ் இனப்படுகொலையை பற்றி கதைக்கவோ கண்டிக்கவோ மறுப்பவர்கள் பன்னிரண்டாம் பயஸ் போன்றவர்களே... அப்போது கம்யூனிசபுச்சாண்டி காட்டி போப்பாண்டவர் இனப்படுகொலைக்கு மௌன அங்கீகாரம் வழங்கினார்.
இன்று சீனா வந்துவிடும் என்று யூச்சாண்டி காட்டி காட்டியே மகிந்தவை காப்பாற்றுகிறார்களா? அவர்கள் எல்லோருக்கும் சேர்த்தே உலகின் மிகப்பெரும் விஞ்ஞானியும், சார்பியல் தத்துவத்தின் தந்தையுமான ஐன்ஸ்ரின் ” இந்த யூத இன அழிப்பை மௌனமாக பார்த்து கொண்டிருக்கும் அனைவரும் நாளை வரலாற்றின் முன்னால் குற்றவாளிகளாக நிற்க வேண்டி இருக்கும் ” என்று கூறினார்.
தீர்கதரிசனம்: மகா பாபிலோன் விழுந்தது காண்க காணொளி
Monday, October 6, 2014
Monday, September 29, 2014
Popular Posts
-
இரட்சிப்பு என்றால் என்ன ??? இந்த இரட்சிப்பை பெற நாம் என்ன செய்ய வேண்டும் ?
-
சிறியவனை புழுதியிலிருந்து எடுத்து மகிமையான சிங்காசனத்தை சுதந்தரிக்கப் பண்ணுகிறார்
-
உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார் இந்த உலகை ஜெயித்து விட்டார் மனுகுலத்தை மீட்ட இறைவன் கல்லறைவிட்டு உயிர்த்துவிட்டார் அலகையின் பிடியில...
-
உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 01 உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 02 உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலம...
-
இந்தனை கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டும் அறிந்து கொள்ளுங்கள்
-
சமாதானத்துக்கான ஒரு சர்வ மதம் விரைவில் ஸ்தாபிக்க படும் அதற்கு போப் மற்றும் ஒரு அரசியல் தலைவரின் அனுசரணையுடன் அது உருவாகபடும்
-
வல்லவனின் தேவன் என்னோடு என்றும் என்றும் என்னோடு வல்ல செயல்கள் செய்கின்றார் உலகத்தின் ராஜா (2) நன்மைகள் நன்மைகள் செய்கின்றார் இன்றும் என்...
-
அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் சசிகுமார். அவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சசிகுமார் தூக...
Blog Archive
-
▼
2014
(158)
-
▼
December
(14)
- தந்தை பெரியாரின் வளர்ப்பு மகன் நாத்திக கொள்கையில் ...
- தந்தை பெரியாரின் வளர்ப்பு மகன் நாத்திக கொள்கையில் ...
- தன்னையே ஜீவ பலியாக கொடுக்க எடுத்தார் ஏழை மனுவுரு
- தன்னையே ஜீவ பலியாக கொடுக்க எடுத்தார் ஏழை மனுவுரு
- METAGOSHIN CONFERENCE 2014 Prophet SADHU SUNDAR SE...
- பெண்களை தாக்கும் மிக கொடிய வியாதியான இரத்த போக்கில...
- நித்தியமான ஆயுள் காப்புறுதி
- இயேசுவின் ஏழு கண்கள்
- உண்மையாக வேலை வேலை செய்தவருக்கு கிடைத்த வேலை மாற்றம
- சத்துருவின் விதை வேசித்தனம்
- இந்து மதத்தின் காவலர்கள் மறுக்க முடியுமா???
- Christian Missionaries opened, 1st college for wom...
- இந்து மதத்தின் காவலர்கள் மறுக்க முடியுமா???
- Angel TV- Prophetic Conference- November 8,2014
-
►
October
(8)
- உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 08
- இஸ்ரேலைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதும...
- கிறிஸ்தவாராக மாறிய முஸ்லிம் இமாம்
- அத்திமரத்தின் கதை-1,பாபிலோன் விழுந்தது-இரண்டாம் த...
- வசதி வரும் போது கடவுளை மறக்காதே
- ஜோசியகாரன்
- இவர்கள் தாம் செய்வது என்ன என்று தெரிந்தே செய்கிறார...
- உலகின் பல இடங்களில் கடுமையான நில நடுக்கம்
-
▼
December
(14)








.jpg)








